Saturday, February 13, 2010

நட்பின் ரூபம்.


இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தோழியிடம் இருந்து வலைப் பேச்சுப் பலகையில் ஹலோ என்று எழுத்துக்கள் தோன்றின. இவரிடம் சில நாட்களே பேசியிருந்தாலும் பல நாட்களாய் பழகிய மனப்பரிச்சயம். அதாவது அவ்வளவு அந்நியோன்னியமான ஓர் உணர்வு இருக்கும். திடீரென்று காணாமல் போய் விடுவார். எத்தனையோ முறை பேசவேண்டும் என்ற உணர்வு ஏற்படும் போதெல்லாம் நான் வலையின் மூலமாகத் தொடர்பு கொண்டிருக்கிறேன். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் எந்த சலனமும் இல்லாது தூரக்கடலில் தொலைந்த உணர்வுகளாய் போய்விடும்.

இவரை வலையில் பார்த்தவுடன், என்னையறியாமல் எனது கைகள் குசலம் விசாரிக்க எழுத்துக்களை அள்ளிவீசும். எனது வாழ்வில் மிகவும் மனம் புண்பட்டு சோர்வாயும் சோகமாயும் அன்று இருந்த என் நிலையில் இவரைப் பார்த்ததும் அந்த சோகத்தை மறந்து விட்டு, அன்றும் அப்படித்தான் குசலம் விசாரிக்க முயல ஆரம்பித்து அதற்கு அவர் பதில் சொல்லாமலும் போகலாம் என்று அனுமானமும் செய்கையில், அவரே ஹலோ என்றதும் மிக்க மகிழ்வடைந்தேன். சௌக்கியமா என்று கேட்ட போது இல்லிங்க...இன்னிக்கு கொஞ்சம் மனசு சரியில்ல, அதான் உங்களோட பேசலாம்னு தோனுச்சு....என்றார். அப்போதுதான் காணாமல் இருந்தாலும், பேசாமல் இருந்தாலும், அவர் என் மீது ஒரு ஆழமான நம்பிக்கை வைத்திருந்தார் என்று தெரிந்து கொண்டேன்.

அவர் மனசு சரியில்லிங்க என்று சொன்னதுமே ஒரு இரக்க உணர்வு என்னுள் தோன்றியது. பாவம் என்ன கவலையோ என்று மனம் எண்ணிக் கொள்ள அவரிடம் என்ன ஆச்சு சொல்லுங்க, என்னாலான உதவி ஏதேனும் உண்டா, ப்ளிஸ் சொல்லுங்க என்றேன்.

நிறைய விசயங்கள்....சரி ஒன்னொன்னா சொல்றேன் என்றார். இவற்றை இணையதள பேச்சறையில் எழுதினால் மனதின் ஒரு அண்மை இருக்காது என்று உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் உங்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாமா என்றேன். அவரது தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

முதல் முறையாய் அவரிடம் தொலைபேசியில் பேசப்போகிறேன் என்ற எண்ணம் வராத உறவு போல் என்னுள் ஒரு உணர்வு. அவர் துடுக்குத்தனமாகவும் பேசக் கூடியவர். மிகவும் இயல்பு நிலை அறிந்தவர். தொலைபேசியில் எண்களை சொடுக்கிய சில வினாடிகளில், அவர் குரல் கேட்டவுடன் அந்தக் குரலிலும் ஒரு பரிச்சயம். முதன்முதலில் பேசும் வாய்ப்புக்கு மகிழ்வு கூறி, என்ன விபரம் என்று கேட்டேன்.

நிறைய நடந்துடுச்சு. என்னோட உயிரா இருந்த என் "ப்ரூனோ" செத்துப் போச்சு என்றார். ப்ரூனோ அவரது நாய். இரண்டு நாட்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமணை சென்ற ப்ரூனோ வரவேயில்லை. மருத்துவர்கள் அதை விட்டுச்செல்லக் கூறினர். எனக்கு மனசே இல்லை. ப்ரூனோ கூட வேண்டாம் என்று என்னிடம் சொல்லியது ஆனால் தப்பு பண்ணிட்டனோன்னு தோனுது என்றவர் குரலில் ஒரு விரக்தி தெரிந்தது. அது மட்டுமில்ல, இரண்டு நாய் குட்டிங்க ரோட்டுக்கு ஓடிப்போய், வண்டி ஏறி இறந்துடுச்சுங்க...கடைசியா இருந்த குட்டியை, ப்ளூ க்ராஸ் கொண்டு போய்ட்டாங்க. அதை நினைச்சு ரொம்பக் கவலை. அவருடைய மென்மையான மனமும் அதில் ஏற்பட்ட காயத்தின் வலியும் பல ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் இதுவரை பேசாத ஒரு நபரை அழைத்துப் பேசும் அளவு வாட்டியிருந்ததை உணர்ந்தேன்.

எனது மனமும் அவர் போல்தான் என்று எனக்குத் தெரியும். நான் ஒரு ஆண்மகன், அவர் ஒரு பெண் என்றாலும் கண்களில் கசிவு வரத்தான் செய்தது. அவரது அந்த நிலையில் அவரை ஆறுதல் படுத்த முயன்றேன். என் நிலையை விட்டுவிட்டு வாழ்வியலின் யதார்த்தத்தை பக்குவமாகச் சொல்ல முயன்றேன். விபரங்களை விலாவரியாகக் கேட்டேன். ஒவ்வொன்றாய் அவர் சொல்லச் சொல்ல என்னையும் அதில் ஒப்பிட்டு என் வாழ்வில் நடந்த சில விசயங்களையும் பேசப் பேச ஒரளவு அவரின் மனதின் வலி குறைந்தது போல் உணர்ந்தேன். அவரிடம் பேசிய அந்தக் கணங்களின் அன்பு என் மனதின் சோகத்தையும் கொஞ்சம் குறைத்தது போல் உணர்ந்தேன்.

சற்று நேரம் பேசிய பின், அவரை அதையே எண்ணிக் கவலைப் படாமல் இருக்க வேண்டிவிட்டு, கொஞ்சம் காஃபி சாப்பிட்டு விட்டு பாடல்களை கேட்கக் கூறினேன். கதவுகளைத் திறந்து கொஞ்சம் வெளிச்சத்தையும், காற்றையும் அனுபவிக்கக் கூறினேன். சிறு பிள்ளைக்கு சொன்னால் தலையாட்டுவது போல் அவர் சரி, சரி என்றார். அவருடன் பேசிக் கொண்டேயிருக்கலாம் ஆனால் நான் அலுவலகப் பணியில் இருந்தேன். ஆகவே மன்னிப்பு வேண்டிவிட்டு பிரியாவிடை பெற்றேன்.

அவரும் மறுபடி முடிந்தால் அவரை அழைக்கக் கூறினார். சரியென்று சொல்லிவிட்டு அகன்றேன். அவருடன் பேசிய நிமிடங்கள் எங்கிருந்தோ வந்த தேவதையின் அழைப்பு போல் அவர் மனம் சரியில்லாமல் போன கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டாலும், என் மனதில் மண்டியிருந்த சோகத்தையும் அழுத்தத்தையும் குறைத்தது கண்டு ஆச்சர்யம் கொண்டேன்.

எதிர்பாராமல் நடந்த அந்நிகழ்வு, தெய்வாதீனமாய் நடந்தது போல் உணர்ந்தேன்.
நம்பிக்கை என்பது ஒரு அன்புணர்வாகவும் அமையலாம் என்று அப்போது தெரிந்து கொண்டேன். பொதுவாகவே எல்லாரிடமும் அன்பு செயல் வேண்டும் என்று முயலும் எனக்கு அவரிடம் பகிர்ந்து கொண்ட அந்த நிமிடங்கள் ஒரு வரம் போல் இருந்தது. உணர்வுகளின் சக்தியும், உறவுகளின் உன்னதமும் எந்த நிமிடத்திலும் நமக்கு வரலாம். அந்த உறவுகள் தரும் மகிழ்ச்சி, நம்மை இழந்த நம்பிக்கையை மீட்டுத்தரும் வரப்பிரசாதமாகவும் அமையலாம்.

அர்த்தங்களில் அடிப்படையில் அமையும் நமது வாழ்க்கைக்கு நல்ல உறவுகள் முக்கியம். அது எங்கிருந்து வேண்டுமானாலும் எப்படியும் வரலாம் அதை மதிப்பதும், மனதில் வைத்துப் போற்றுவதும், நல்ல நட்பையும், அந்த நல்ல நட்பால் வரக்கூடிய சக்தியையும் அறிய வைக்கும்.

அதற்குப் பின் அவரிடம், அவ்வப்போது பேசினேன். அந்த நட்பு, இன்னும் என் சோகங்களுக்கு இடும் மருந்தாய் இருப்பதை உணர்ந்தேன். ஒரு சுகம் என்றும் அறிந்தேன்.

நட்பின் உண்மை உணர்வுகளில் இருக்கும். அந்த உணர்வுகளை மதிக்கவும், அதன் நிழலில் அமைதி காணும் சுகத்தையும் நல்ல நட்புள்ளங்கள் அறியும். இனிமையான இந்த நட்பு கண்டும் காணாததாய், இருந்தும் இல்லாததாய், அறிந்தும் அறியாததாய், வாழ்க்கை சூழ்நிலைகளில் சாயம் பூசிக் கொண்டாலும், ஒரு உண்மையின் தேடலாய் இருப்பது என்பதையும் உணர்கிறேன்.

நண்பர்களே, நல்ல நட்பு என்பது தேடியும் கிடையாதது. அது அருகிலிருக்கும் தெய்வம் போல்... நட்பு செய்யுங்கள்...நட்பை மதியுங்கள்....நட்பு என்பது ஒரு நல்ல உள்ளத்தின் வரைய முடியாத பரிமாணம்....
வாழ்க நட்பு! வாழ்க நண்பர்கள்!

முகில்...

நன்றி: நிழற்பட உதவி: glogster.com

1 comment:

  1. Welcome to Mumbaihotcollection.com, home of the finest Mumbai escorts in Mumbai area. Our Mumbai escorts are the finest Mumbai has to offer and will provide an unforgettable Mumbai Escort experience! Mumbaihotcollection.com has the most beautiful, new and experienced adult female companion entertainers available in the , and you will have a divine selection of talented, sophisticated, and charming escorts in the Mumbai area, providing you with a once in a lifetime experience you'll never forget. Why take the traditional Mumbai dating or Windy City girlfriend route when our Mumbai escorts are the clear choice for an exceptional experience without the hassle! Dating our Mumbai escorts give you the obvious advantage. Wet N Wild Mumbai escorts are available for a variety of social occasions when you need an absolute stunner who's GORGEOUS, smart, fit, intelligent and sexy! Wet N Wild Mumbai escorts offers a variety of fine female companions for any occasion when you need for as long as you need! Call Wet N Wild Mumbai escorts when you're ready to book an unforgettable experience with the finest Mumbai Escorts, Mumbai has to offer!
    Escorts in Mumbai
    Mumbai escorts services
    Mumbai Escorts
    high profile Mumbai escorts
    blogs
    Escorts Mumbai
    Mumbai Escorts Blogs

    ReplyDelete